Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டு 43 பேர் புதிய மந்திரிகளாக பதவியேற்றனர். அதன்பின்னர் புதிய மந்திரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, அவர்களுக்கு வாழ்த்துக்களையும், பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.
நம் நாட்டில் கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறோம். இதுபோன்ற நிலையில் ஊடகங்களுடன் தேவையில்லாமல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தியதாக தெரிகிறது.
நம் நாட்டின் மக்கள் தொகையில் கணிசமான எண்ணிக்கையில் தடுப்பூசி போடுகிறோம். பரிசோதனையும் தொடர்ந்து அதிகமாக உள்ளது. எனவே, சிக்கலை எளிதாக கடந்துவிடுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.
நாட்டில் பாதிப்பு விகிதம் படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும், மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் அதிக எண்ணிக்கையிலான தொற்றுகள் தொடர்ந்து வருவது குறித்து பிரதமர் கவலை தெரிவித்துள்ளார்.